Friday, September 14, 2007

உயிர் கொல்லும் ஒரு சொல்..!!

ஊசி முனை கொண்டு
இதயத்தைக் குத்துவதைக் காட்டிலும்
பலத்த வலி என்பது இது...

செருப்பால் அறைவதைக் காட்டிலும்
கொடுந்தண்டனை என்பது இது...

பேசாமல் வதைக்கும்
மவுனத்தை காட்டிலும்
பேசிக் கொல்வது என்பது இது...

ஆழத்திலும் ஆழமான
என் நேசத்தையும்
மாற்றிக் கொள்ள இயலாத
என் மனத்தை
அறிந்து கொண்ட பிறகும் கூட
அண்ணா என்றே அழைக்கும்
ஆசைத் தோழியின்
அந்த ஒரு சொல்...

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home