Friday, September 14, 2007

நினைவுகள்...

சிலையைப் பார்ப்பது போல்
ஒருவருக்கொருவர் நாம்
முதன் முதலாய் பார்த்த
அவசர நொடிகள்!!!

ஒற்றை முதற்பரிசை
பகிர்ந்து கொண்டதும்
இணைந்துவிட்ட நம்
மன அலைகள்!!!

காதலிக்கிறேனஎன்று
நீயோ நானோ
சொல்லத்தேவையென்னவென்று
சொல்லிச் சிரித்த
கதவு ஓர முதல் முத்தம்!!!

மெய் ஞானம் முதல் முத்ததில் என்று
நம்மில் உதயமான ஞானம்!!!

சில நேர ஸ்பரிசங்கள் தந்த
பல நேர உணர்ச்சிகள் பொங்கியெழ
அதைக் கட்டுப்படுத்த
நாம் தவித்த தவிப்புகள்!!!

வெட்கத்தால் வேகமாய் நீ செல்ல
என் நினைவுகளின் இல்லத்திற்கு
ஓடிவந்து கொஞ்சும் உந்தன்
கொலுசு சங்கீதத்தை
ரசிக்கும் மலரும் நினைவுகள்!!!

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home